ஐ.பி.எல். போட்டிகள் குறித்து வெளியாகியுள்ள விசேட தகவல்….

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்று ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.

இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “ எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்றார்.

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் திகதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

Related Articles

Latest Articles