ஒரே பிரசவத்தில் 5 சிசுக்கள்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறும மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் உள்ளடங்கலாக 5 குழந்தைகளை பிரசவித்ததாகவும், குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles