முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை ஓமான் செல்கின்றார்.
அந்நாட்டில் நடைபெறும் மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
எதிர்வரும் புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளார்.
அதன்பின்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
