ஓய்வுபெற இருப்பவர்களுக்கான அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற இருப்பவர்கள் தற்போது குழுப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles