பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமெவெல பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கமேவெல பகுதிக்கு விரைந்த பசறை பொலிஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபரின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்.
இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6520 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு கமேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கேரள கஞ்சா தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கமேவெல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 180 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்ததோடு இவர்கள் இருவரையும் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று இரவு (28/09) இடம்பெற்றுள்ளது.
நிருபர் -ராமு தனராஜா-