” 234 பயனாளிகளுக்கு நேற்று (‘ஒரிஜினல் ஒப்பு”) அசல் காணி உரித்து வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கும் இந்த காணி உரித்து வழங்கப்படும்.
பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது ஏற்கனவே கட்டப்பட்ட 237 வீடுகளின் பயனாணிகளுக்கு காணி உரித்தும், எதிர்காலத்தில் கட்டப்படவுள்ள வீடுகளின் பயனாளிகளுக்கு அதற்குரிய ஆவண பத்திரமும் வழங்கப்பட்டது. நாம் பொய்யுரைக்கவில்லை.
காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே மலையகத்திலுள்ள எதிரணி அரசியல் பிரமுகர்களால் போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கடந்த காலங்களில்தான் கடதாசி வழங்கப்பட்டது. நாம் காணி உரித்தையே வழங்குவோம்.”
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேற்கண்டவாறு கூறினார்.