கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கமும், வெள்ளையானைத் திட்டங்களும்!

இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற தயங்குகிறது.

குறிப்பாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெள்ளையானைத் திட்டங்களாகவே மாறியுள்ளன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், மத்தல விமான நிலையத் திட்டம் என்பன முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இதற்காக வழங்கிய கடன்களினால் இலங்கை சிக்கித் தவிக்கிறது.

அத்துடன், மேலைத்தேய நாடுகள் பின்பற்றும் ஒரு முறையை தாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பது சீனாவின் வாதமாகும். அதுமட்டுமின்றி இலங்கையுடன் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ளப்படும் பட்சத்தில் தான் கடன் வழங்க இருக்கின்ற ஏனைய நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டி ஏற்படும் என்பதாலும் அதற்கு சீனா தயங்குகிறது.

இலங்கையை மீட்க முழுமையான உதவி வழங்குவதாக கூறுகின்ற சீனா கடன் மறு சீரமைப்பு செய்து கொள்வதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்காமல் இருக்கின்றது.

நாணய நிதியத்துடன் பேச்சு

இலங்கை தற்போது எதிர்க்கொண்டிருக்கின்ற டொலர் நெருக்கடியை சமாளிப்பதற்கும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேற்கொள்வதற்காகவும் இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் ஒரு நீண்டகால அடிப்படையிலான கடன் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.

அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி வழங்கப்படும்போது சர்வதேச நம்பிக்கையை இலங்கை மீண்டும் பெற்று சர்வதேச நாடுகளிடமும் சர்வதேச நிறுவனங்களிடமும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் கடந்த ஆறு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற நிலையில் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்டத்திலான தரப்பினருடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்த முடிவை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுவதுடன் அங்கு அது நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த முடிவு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவில் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு முக்கியமான விடயத்தை செய்ய வேண்டியிருக்கின்றது.

அது என்ன? இலங்கையானது ஏற்கனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் இலங்கையிடம் பிணைமுறிகளை பெற்றுக்கொண்டு கடன் வழங்கிய சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு செய்து அந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்திலேயே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.

சீனாவின் தயக்கம்

ஆனால் சீனா இன்னும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு தயார் என்று அறிவிக்கவில்லை. சீனா சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த செயற்பாடுகளுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறது. ஆனால் கடன் மறுசீரமைப்பு செய்ய விருப்பமா இல்லையா என்பதனை அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? இது முக்கியமாகும்.

இந்த காரணத்தை அறிந்துகொள்வது முக்கியமாகவுள்ளது. பொதுவாக சீனா தான் கடன் வழங்கிய எந்தவொரு நாட்டுடனும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதில்லை. இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற தயங்குகிறது.

அதாவது மேலைத்தேய நாடுகள் பின்பற்றும் ஒரு முறையை தாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பது சீனாவின் வாதமாகும் என்பது கருதப்படுகின்றது.

ஆனால் சீனா உட்பட சகல நாடுகளும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு புதிய நீண்டகால கடனை (2.9 பில்லியன் டொலர்) வழங்கும். இலங்கை கடன்களை மீள்செலுத்த முடியாது என்று வங்குரோத்து நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதால் கடன்மறுசீரமைப்பு என்பது கட்டாயமாகின்றது.

எனவே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இந்த செயற்பாட்டில் சீனா முக்கியமான நாடாக இருக்கிறது. சீனா என்ன செய்யப்போகிறது என்பதே மிக மிக முக்கியமாக இருக்கின்றது.

இந்தியா ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்கிய நாடுகள் ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் கூட இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள தயாராகி விட்டன. அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன.

இதற்கு சீனா இதுவரை தயக்கம் காட்டியே வருகிறது. இது தொடர்பில் இலங்கை ஏற்கனவே சீனாவுடன் இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது.

இந்நிலையில் சீனா இலங்கையுடன் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ள இணங்கும் பட்சத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள ஒரு நாடு தயங்கினாலும் நாணய நிதியத்தின் கடன் உதவிகளைத் தொடர்ந்து பெற முடியாது போகும்.

எனவே சீனாவின் முடிவிலேயே இலங்கையில் இந்த சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் நிலை தங்கியிருக்கின்றது. சீனா என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி தொடர்கிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles