” எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் குறித்த முடிவை வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலமீது மட்டும் திணித்து வீண் பிரச்சினையை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உருவாக்கியுள்ளார்.” – என்று அரசாங்க பங்காளிக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் செயலையும் மேற்படி கட்சிகள் கண்டித்துள்ளதுடன், அவரின் கூற்றையும் நிராகரித்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கம்மீதான மக்களின் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ‘ஆள் அரசியலுக்கு’ அரச தலைவர்கள் ஆரம்பத்திலேயெ முடிவு கட்டப்படவேண்டும் எனவும் 8 பங்காளிக்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தவில்லை. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டும் எனவும் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
1.எமது மக்கள் சக்தி
2.தேசிய சுதந்திர முன்னணி.
3.ஜனநாயக இடதுசாரி முன்னணி.
4.ஶ்ரீலங்கா சமசமாஜக்கட்சி
5.தேசிய காங்கிரஸ்
6.ஶ்ரீலங்கா கம்யூனிஸ்கட்சி
7. ஐக்கிய மக்கள் கட்சி
8.ஶ்ரீலங்கா மக்கள் கட்சி











