மேற்கிந்திய தீவுகளில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிருக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து விளையாடவுள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 4ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இதில் சமரி அதபத்து, ஸ்டெப்பினி டெய்லர் தலைமையிலான கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் வெளிநாட்டு லீக் தொடர்களில் சமரி அதபத்து, உதேசிகா பிரபோதனி மற்றும் சஷிகலா ஸ்ரீவர்தன ஆகியோர் மாத்திரமே விளையாடியுள்ளனர்.
இதில் சமரி அதபத்து மாத்திரமே கியா சுபர் லீக், மகளிர் பிக் பேஷ் லீக், மகளிர் ஐ.பி.எல். மற்றும் பையர்பிரேக் அழைப்பு போன்ற பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் விளையாடியுள்ளார்.










