கருத்து கணிப்பில் செந்தில் 80 வீதத்தால் முன்னிலை!

இம்முறைப் பொதுத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்து தமிழ் வேட்பாளர்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் செந்தில் தொண்டமான், முன்னிலையில் உள்ளார் என்று, கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது என ‘தமிழ்மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமூக அபிவிருத்தி மன்றம், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், தமிழ் யூனியன், நாளைய மலையகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளிலேயே, செந்தில் தொண்டமான் முன்னிலையில் உள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சமூக அபிவிருத்தி மன்றம், கந்தேகெதரை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட 15 தோட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 81 சதவீதமளவில் முன்னிலையிலுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், ஒன்றியத்திலுள்ள 400 உத்தியோகத்தர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும், அவர் 81 சதவீதம் முன்னிலையிலுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் யூனியன் அமைப்பானது, தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்ட 1,476 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 82 சதவீதத்தில் செந்தில் முன்னிலையிலுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில், நாளைய மலையகம் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 79 சதவீதமும் தொலைபேசிச் சின்னம் 12 சதவீதமும், யானைச் சின்னம் 6 சதவீதமும், மக்கள் விடுதலை முன்னணி 2 சதவீதமும், சுயேச்சை குழுக்கள் 1 சதவீதமும் பெற்றுள்ளன.

மலையக சகவாழ்வு சங்கம் மேற்கொண்ட ஆய்வில், 81.6 சதவீதமளவில் செந்தில் தொண்டமான் முன்னிலையிலுள்ளார். ” – என்றுள்ளது.

அதேவேளை, அரச புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட கருத்து கணிப்பிலும் செந்தில் தொண்டமானே முன்னிலை வகிப்பார் என தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles