கலஹா, தெல்தோட்டை வீதியில் ஹால்வத்த பகுதியில் இபோச பஸ்மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி இன்று (6) பிற்
பகல் பயணித்த பஸ்மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
