கல்வி மறுசீரமைப்பு குறித்து நுவரெலியாவில் கலந்துரையாடல்!

நுவரெலியா மாவட்டத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (25) நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் நடைபெற்றது. கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய இயக்கத்தால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது,

மேலும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக வாதிடும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

மகா சங்கத்தினர், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், காமினி தேசிய பாடசாலையின் அதிபர் கரகஹவுல்பத பன்னரதன தேரர், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே, கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மஞ்சுள சுரவீராராச்சி, மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன், நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் திஸாநாயக்க, ஊவா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் இந்திக தென்னகோன், பொறியாளர் அசங்க பாலம்கும்புர, பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீட மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹஷான் கருணாசேன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles