அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் காலி வலஹன்தூவ தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண, இந்திய தூதரக அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துக்கொரால, இசுரு தொடாங்கொட மற்றும் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி. குமாரசிரி ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அதேவேளை, மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் கடைசியாக அமைச்சு பதவி வகித்த காலத்தில் 50 வீடுகளை அமைப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
