தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு மலையக மக்கள் முன்னணிக்கு, அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் இதர பங்காளிக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் தலைவர்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
20 இற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, தன்னிச்சையான வகையில் சில முடிவுகளை எடுத்தமை , ஆளுங்கட்சியுடன் மலையக மக்களுக்கு உள்ள இரகசிய உறவு உட்பட சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அக்கட்சியை வெளியேற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாகாணசபைத் தேர்தலில் கூட்டணியின் வேட்பாளர்களை மனோவும், திகாவுமே தீர்மானிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.










