யாழ்ப்பாணம், பருத்தித்துறை – திக்கம் பகுதியில் இரண்டு கிலோ கேரள கஞ்சாப் பொதியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகின்றது என இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திக்கம், தும்பளை மற்றும் பலாலி அந்தோணிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே கைதுசெய்யப்பட்டு உள்ளனர் எனவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
