பசறை நகரில் ஒரு தொகை கேரள கஞ்சாவை தம்வசம் மறைத்து வைத்திருந்த 48 வயது மதிக்கத்தக்க நபரொருவரை பசறை பொலிஸார் நேற்று (மாலை கைது செய்துள்ளனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து உப பொலிஸ் பரிசோதகர் பிரியந்த இஷாந்த தலைமையிலான குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விற்பனை நோக்கில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பசறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.