கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்க புதிய சட்டம்

போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும், அவை சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணானவை என்றும், அந்த யோசனைகள் அனைத்தையும் உள்ளடக்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்தத் தகவல்களைக் கருத்தில் கொண்டு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் அறிவியல் ரீதியான வழிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்கும் வகையில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய சட்ட வரைவைத் தயாரிக்குமாறு நீதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஆராயப்பட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் போது , ​​அந்த இடத்திற்கு நீதவானை அழைத்து விசாரணை நடத்தவும், பகுப்பாய்வு அதிகாரி ஒருவரை அழைத்து மாதிரியைப் பெறவும், பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கும் ஏற்ற வகையில் இந்த சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தற்பொழுது திட்டமிட்டுள்ளவாறு பகுப்பாய்வு அதிகாரி வெற்றிடங்களை நிரப்ப நிரந்தர மற்றும் தற்காலிக நியமனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

டிசம்பர் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களையும் இணைத்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ” அகன்று செல்” திட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களும் போதைப்பொருட்களற்ற நிறுவனங்கள் என்பதை உறுதி செய்வதற்கு அந்த நிர்வாகத்தினால் முடியுமாக இருக்க வேண்டும் .அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குப்பியாவத்தே போதானந்த மகாநாயக்க தேரர் உட்பட இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, புத்த சாசன , சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, பதில் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles