இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 168 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 115 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட மூவரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட ஐவரும் , 41-50 வயதுக்கிடைப்பட்ட 18 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 26 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட 33 பேரும், 71 வயதுக்கு மேற்பட்ட 82 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை 33 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர்.
