கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியே வராத பெண்

இந்தியாவில் கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளை கடுமையாக பாதித்திருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி ஓரிரு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து  தற்போது அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில்

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் சுஜன் மாஜி மற்றும் முன்முன் மாஜி தம்பதி ஒரு மகனுடன் வசித்துவந்துள்ளனர். கொரோனா தொற்றின் போது தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முன்முன் மாஜி மிக தீவிரமாக கடைபிடித்துள்ளார்.

எனினும் கொரோனா பரவல் முடிந்து இயல்புநிலை திரும்பி இருந்தாலும் முன்முன் மாஜி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கணவர் சுஜன் தன்னுடைய மனைவியிடம் பலமுறை கூறியும் பயனளிக்கவும் இல்லை.

நாட்கள் செல்ல செல்ல அவர் சரியாகிவிடுவார் என்றும் சுஜன் கருதி வந்த சூழலில் அலுவலகம் சென்று வந்த சுஜனையும் வீட்டுக்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு தன்னுடைய மகனுடன் முன்முன் வாழ்ந்து வந்த சூழலில், வேறு வழியில்லாமல் அவரது வீட்டுக்கு அருகே சுஜன் வாடகை வீடு ஒன்றையும் எடுத்து தங்கி வந்துள்ளார் .

சுஜன் மனைவி மற்றும் மகனுக்காக காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வீட்டு கதவருகே வைத்து விட்டு , அவர்களுடன் வீடியோ கால் மூலமாகவும் அவர் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் முடியாமல் போக சுஜன். பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிஸார் வந்தபோதும் மாஜி கதவைத் திறக்கவில்லை .

இதனையடுத்து வேறு வழியின்றி பொலிஸார் கதவை உடைத்துச் சென்று அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுள்ளார்கள்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles