கொரோனா கட்டுக்குள் வந்ததும் மாகாணசபைத் தேர்தல்! எதிரணி வலியுறுத்து!

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல்களை நடத்தும் விதம் பற்றி தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. எமது கட்சியும் யோசனைகளை முன்வைத்துள்ளது. உள்ளாட்சிமன்ற, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஒரு முறைமையின்கீழ் நடத்தப்பட வேண்டும் என அரசு கூறுகின்றது. ஆனால் விகிசாதார முறைமை பாதுக்காக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் மூன்றாண்டுகள் பிற்போயுள்ளன. எனவே, அதற்கான தேர்தல் முதலில் நடத்தப்படவேண்டும். தற்போதைய நிலையில் நடத்தமுடியாது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலம் அடுத்தாண்டு பெப்ரவரி மாதம்தான் நிறைவுபெறுகின்றது. எனவே, மாகாணசபைகள் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். தேர்தல் என்பது ஜனநாயக உரிமை. அதனை அரசு பிற்போடக்கூடாது.

அதேவேளை, கொரோனா நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதார வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதை ஏற்கமுடியாது. பொருட்களின் விலைகள் இப்படி அதிகரிக்கின்றதெனில் அரசொன்று எதற்கு?” – என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles