கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, இறம்பொடை தொண்டமான் கலாச்சார நிலையம், சுமார் 270 படுக்கை வசதிகளுடன் கூடிய இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்படவுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் , சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
எதிர்வரும் காலப்பகுதிகளில் மேலும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற இடைநிலை சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மலையக பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை வசதிகளை வழங்கவும், நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்கவும் சகல ஏற்பாடுகளும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி வீட்டை விட்டு வெளியே செல்லுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கோரப்பட்டுள்ளது.










