பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பு, தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடும் காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை நேற்றிரவு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. பிசிஆர் பரிசோதனையில் குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










