‘கொரோனா’விலிருந்து குணமடைந்து சபை அமர்வில் பங்கேற்றார் சபாநாயகர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முழுமையாக குணமடைந்து, தற்போது தமது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் பங்கேற்றிருந்தார். அவர் தலைமையிலேயே சபை கூடியது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய தலைமையிலேயே சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், இன்று சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

Related Articles

Latest Articles