கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் என்பது உறுதி என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளரே கொழும்பு மேயர் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எனவும் ஊடகங்கள் முன்னிலையில் அவர் கருத்து வெளியிட்டார்.
‘ மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். எனவே, மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் 267 சபைகளிலும் நாம் ஆட்சி அமைப்போம்.” – என்றார்.
