‘கொவிட் – 19’ பாராளுமன்றம் எவ்வாறு கூட வேண்டும்?

“பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்படும்.” என்று  சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்‌ஷ்மன் கம்லத் தொரிவித்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின்  வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார அமைச்சின் ஊடாக இந்த வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், பாராளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட் -19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது குறித்து ஆராயும் நோக்கில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்‌ஷ்மன் கம்லத் தலைமையிலான சுகாதார அமைச்சின் குழுவினர் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வியஜம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மேற்கொண்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles