‘கோ ஹோம் ரணில்’ – போராட்டம் நடத்தி புதிய இடம் ஒதுக்கினார் ஜனாதிபதி!

” நாடாளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்களுடன் நடத்திய விசேட சந்திப்பில் எமக்கு கூறினார்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

” பாராளுமன்றம் 24 மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தனது அரசாங்கத்தின் கொள்கை உரையை ஆற்ற ஜனாதிபதி விரும்புவதாக நினைக்கிறேன்.

 

போராட்டக்காரர்கள் தமது “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்றும்,

தமது நல்லாட்சி காலகட்ட அசல் 19ம் திருத்த ஆவணம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அரசியலமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும் ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தையும், பாராளுமன்றத்தையும், எம்பீக்களை கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் கூறினார்.” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles