‘கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதால் பிரச்சினை தீராது’

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரசாங்கம் தனியே பொறுப்புக் கூற முடியாது பாராளுமன்றத்தின் ஊடாக அதற்கு தீர்வு பெற்றுக் கொள்வது அவசியம். 1978 முதல் ஆரம்பமான இந்த நெருக்கடி நிலை 2015 ஆம் ஆண்டு உக்கிரமடைந்தது

நாடு சுமக்க முடியாத அளவில் கடன்களை கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டதன் விளைவையே இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளது என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 45 ஆவது சரத்திற்கிணங்க நிதி தொடர்பான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது. அதற்கிணங்க ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் அதற்கான பொறுப்பு உள்ளது.

நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் கடன் பெற்றுக் கொள்ளாத எந்த அரசாங்கமும் கிடையாது. வரவுக்கு மேல் செலவு என்ற நிலையே தொடர்கிறது.கடனைப் பெற்றுக் கொண்டு அதற்கான வட்டியையும் முதலையும் செலுத்த நேரிட்டுள்ளது.
எமது ஏற்றுமதி வருமானம் 10 பில்லியனாக உள்ள நிலையில் இறக்குமதிக்கான செலவு 22 பில்லியனாக உள்ளது.

தற்போது நாட்டில் இடம்பெறுவது அரசியல் நெருக்கடி அல்ல. தொழில்நுட்ப நெருக்கடியே. நிதி முகாமைத்துவம் அவசியமாகிறது. அதற்கு தீர்வு காண்பதில் பாராளுமன்றம் முன்னின்று செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதால் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கோ பால்மா நெருக்கடிக்கோ தீர்வு கிடைக்காது.

இது தேசிய நெருக்கடியாக கவனத்திற் கொண்டு அனைவரும் இணைந்து இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்.
அதேபோன்று நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் உருவாக்கப்பட்டதல்ல. “- என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles