” ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட உயர் மட்ட பதவிகளில் மாற்றம் அவசியம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் திறமையானவர்களால் புதிய கட்சியொன்று உருவாக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ஐக்கிய மக்கள் சக்தியில் நிச்சயம் மாற்றம் இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லையேல் முன்னோக்கி பயணிக்க முடியாது.
எனது தொகுதி பண்டாரவளையாகும். ஜனாதிபதி, பொதுத்தேர்தல்களின்போது தொகுதியில் தோற்றதால் நான் தொகுதி அமைப்பாளர் பதவியை துறந்து, சிறந்த முன்னுதாரணத்தை வழங்கினேன்.
எனக்கு பதவி, பட்டம் முக்கியமில்லை. அரசியல் டீலும் கிடையாது. அதனால்தான் கூறவேண்டிய விடயங்களை வெளிப்படையாகவே அறிவித்துவருகின்றேன். ஏதேனும் கட்சி அரசியல் டீலில் ஈடுபட்டால் அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். அதற்குரிய முதுகெலும்பு எனக்கு இருக்கின்றது. ” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட பதவிகளில் மாற்றம் அவசியம். எப்படியான மாற்றம், யார், யார் மாற்றப்பட வேண்டும் போன்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன். கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை கட்சி தலைவரும் உணரவேண்டும்.” – என சமிந்த விஜேசிறி மேலும் குறிப்பிட்டார்.










