சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி வழங்கி ஜேர்மன் தேர்தலில் வென்ற மெர்ஸ்

ஜேர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வி அடைந்துள்ளார்.

ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை என்று அவர் கொடுத்த வாக்குறுதி பெறும் பங்குவகித்ததாக தெரிகிறது.

ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெரும்பான்மை வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளன.

வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மெர்ஸ், “ஜெர்மனியில் இனி மீண்டும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சி நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.

1955 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பிரிலோன் நகரில் பிறந்தவர் மெர்ஸ். இவர் குடும்பம் சட்ட நிபுணர்கள் பின்னணி கொண்டது. 1972-லேயே சிடியு கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டார்.

1989-ம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ல் ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
அவர் சார்ந்த கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த மெர்ஸ் 2000-ம் ஆண்ட்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார்.
2002-ல் அப்பதவியை ஏஞ்சலா மெர்கலிடன் வழங்கினார்.

2005-ல் அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு ஏற்பட்டது. 2009-ல் அரசியலில் தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த மெர்ஸ் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

சட்டம், நிதி மேலாண்மைத் துறையில் தனக்கென தனியிடத்தை நிறுவினார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். ஏஞ்சலா மெர்கல் பதவியை இராஜினாமா செய்தபின்னர் மெர்ஸ் தீவிர அரசியலில் ஈடுபட்டத் தொடங்கினார்.

ஆனாலும் உடனடியாக அரசியலில் மீள் கட்டமைப்பு அவருக்கு சாத்தியப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் பிரவேசித்தார் மெர்ஸ். 2022-ல் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதன்பின்னர் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியின் தேசியத் தலைவரானார்.
இந்நிலையில் நடந்துமுடிந்த தேர்தலில் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பாக அவரது வலுவான நிலைப்பாடு மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற அவரது வாக்குறுதிகள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்குவகித்துள்ளன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles