போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லாததால், சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தைக்கு கொண்டு வருவதற்கான போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், விவசாய நிலங்களிலேயே பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதோடு, மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.










