சபாநாயகர் இராஜினாமா!

சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

” “கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனது கல்வித் தகுதி குறித்து நான் தவறான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

ஆனால் தற்போது அந்த கல்வித் தகைமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து அவற்றைப் பெற வேண்டியிருப்பதாலும், உடனடியாக அந்த ஆவணங்களை விரைவாக சமர்ப்பிப்பது கடினமாகியிருக்கிறது.

எனக்கு Ph.D. பட்டம் வழங்கிய ஜப்பானின் வசிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து இது சம்பந்தமான கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்கும் இயலுமை என்னிடம் உண்டு, அவற்றை விரைவில் சமர்ப்பிக்க முடியும் என்று நம்புகிறேன்.

எவ்வாறாயினும், நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்திற்கும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதை இதன்மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles