சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கு பிணை!

மருதானையில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles