பெருந்தோட்டத்துறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவி, மொட்டு கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகக் கருதப்படுபவர்.
சிறைச்சாலை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் சிக்கியவர்.
