சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த சஜித், அநுர, மனோ, மைத்திரி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட், ரெலோ என்பன பங்கேற்கவில்லை.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles