சாணக்கியம் – வீரம் கலந்த ஜீவனின் வெற்றிப்பயணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அரசியல் அணுகுமுறையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியமும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரமும் கலந்திருப்பதாக மலையக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி அவற்றுக்கு தீர்வுகாண்பதற்காக முழுவீச்சுடன் செயற்பட்டுவரும் ஜீவன் தொண்டமானின் அரசியல் இராஜதந்திரம் பாராட்டத்தக்கது  எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மொட்டு சின்னத்தின்கீழ் இலக்கம் 3இல் போட்டியிடும் ஜீவன் தொண்டமானுக்கு நாளுக்கு நாள் பேராதரவு வலுத்துவருகின்றது.பல தரப்பினரும் அவரை சந்தித்து ஆதரவு வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை சந்தித்த மலையக புத்திஜீவிகள் குழுவொன்று, அவருக்கு முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்ததுடன், ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எதிர்காலத்திலும் ஒத்துழைப்பு நல்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது மலையகத் தமிழர்களின் தாய்க்கட்சியாகும் என்பதுடன் எமது சமுதாயத்தின் அடையாளமும்கூட. குறிப்பாக இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர், பல தடைகளுக்கு மத்தியிலும் அந்த தாய்க்கட்சியை அமரர் ஆறுமுகன் தொண்டமான் பாதுகாத்தார். சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி கட்சியைப் பலப்படுத்தினார்.

அவரின் மறைவின் பின்னர் இ.தொ.கா. பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றே பலரும் கருதினர்.ஆனால், ஜீவன் தொண்டமானின் தலைமையில் காங்கிரஸ் என்ற குடும்பம் நிலைகுலையாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளராக இருந்து ஜீவன் வழங்கும் தலைமைத்துவம் இ.தொ.காவை உச்சத்துக்கு கொண்டுசெல்லும் என்பது உறுதி. அதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.

1994 இல் பொதுச்செயலாளராகவே அமரர் ஆறுமுகன் தொண்டமான் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை பதிவுசெய்தார். இம்முறை ஜீவனும் பொதுத்செயலாளராக கன்னி பொதுத்தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் மலையக புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டனர்.

Related Articles

Latest Articles