சாமிமலையில் குளவிக்கொட்டு – நால்வர் பாதிப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கிலனுஜி டீசைட் தோட்டத்தில் நான்கு ஆண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலை தமது அன்றாட தொழிலுக்கு சென்று கொண்டிருந்த வேலை மரம் ஒன்றிலிருந்த குளவிகள் கலைந்து சென்று இவர்களை கொட்டியுள்ளன.

பாதிக்கப்பட்ட நால்வரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூடுதலாக பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

சாமிமலை நிருபர் ஞானராஜ்

Related Articles

Latest Articles