” சமஷ்டியா, ஒற்றையாட்சியா என பெயரில் தொங்கிக்கொண்டிருக்காமல், சிறுபான்மையின மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற அரசியலமைப்பையே கொண்டுவரவுள்ளோம்.” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
சமஷ்டி தீர்வு பற்றி எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சமஷ்டிக் கோரிக்கை என்பது நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. சமஷ்டியா, ஒற்றையாட்சியா அல்லது ஐக்கிய இலங்கையா என்ற வார்த்தைகளுக்குள் தங்கி இருக்க நாம் முற்படவில்லை.
நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற குறிப்பாக சிறுபான்மையின மக்களின தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற அரசமைப்பையே கொண்டுவரவுள்ளோம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
