‘சிவநேசனுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்’ – ராஜமணி பிரசாந்த் சீற்றம்

” கடந்த அரசாங்கத்தில் போராடாமல் அதிகார சபை,பிரதேச சபைகளை பெற்றவர்களுக்கு ஏன் ஐம்பது ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசனிடம்,  கேள்வி எழுப்பியுள்ளார் இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவரான  ராஜமணி பிரசாந்த்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல சாதகமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் மலையகத்தை பிரதிநித்துவம் செய்கின்ற அரசியல் கட்சியாகவும் தொழிற்சங்கமாகவும் செயற்படும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் அரசியல் இலாபத்திற்கு அறிக்கை வெளியிட்டு வருகின்றார். அவரின் அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்கள் நகைச்சுவையாக உள்ளது.

கடந்த காலங்களிள் கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்கைகளின்போது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக தமது அழுத்தத்தை தெரிவிக்க பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றே வந்துள்ளன. இவ்வாறான நிலையில் தற்போது தெரிவிக்கபட்ட அழுத்தம் ஒன்றும் புதிதல்ல. அத்தோடு இதனை அரசியலாக்கி,இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மழுங்கடிக்க செய்ய தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த போதும் வேலைநிறுத்த போராட்டம் 100% வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர் தற்போதும் சுயநலமாக அறிக்கை வெளியிடுவது அவரின் பிற்போக்கான அரசியலை வெளிபடுத்துகின்றது.

கடந்த அரசாங்கத்தில் போராடாமல் அதிகார சபை, பிரேதச சபைகளை அமைத்தவர்களுக்கு ஏன் தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக கூறிய ஐம்பது ரூபாய் கொடுப்பனவை பெற்றுகொடுக்க முடியாமல் போனது இது அவர்களின் கையாலாகத தனம் காரணம்.

கடந்த அரசாங்கத்தில் பிரதேச சபைகளை அமைக்கவோ, மலையக அதிகார சபையை அமைக்கவோ போராட வேண்டிய தேவை இருக்கவில்லை. அந்த நல்லாட்சி அரசை உருவாக்க முழு காரணம் மலையக மக்கள் இருந்துள்ளனர். எனவே அதற்கான நன்றிகடன் செய்ய வேண்டிய தேவை அப்போதைய அரசுக்கும் அரசின் பங்காளிகளுக்கும் இருந்தது.

அதிகார சபையும் பிரதேச சபையும் அரசாங்கம் சார்ந்தவை.எனவே இலகுவாக கிடைத்து. ஆனால் பெருந்தோட்ட துறை என்பது தனியார் துறையோடு சம்பந்தபட்டது. எனவே அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தே சிலவற்றை பெறமுடியும். எனவே அழுத்தங்களை பிரயோகித்தும் போராடியும் தான் தனியார் துறையான பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடம் இருந்து எமக்கான தேவைகளை பெற வேண்டும்.

கடந்த கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தையின் போது தலவாக்கலையில் மக்களை வீதிக்கு இறக்கி போராடியது நினைவு இல்லையா? கடந்த மாதம் கூட ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மக்களை வீதியில் இறக்கி போராடியது சிவநேசனுக்கு நினைவு இல்லையா? எனவே இது அரசியல் இலாபத்திற்கா செய்யபட்ட போராட்டங்களா என சந்தேகம் எழுகின்றது. ஆனால் இம்முறை இ.தொ.கா யாரையும் வீதியில் இறங்கி போராடவேண்டும் என கோரவில்லை. மாறாக வீடுகளிள் இருந்தே தமது அழுத்தத்தை கம்பனிகளுக்கு எதிராகவே தெரிவிக்குமாறு கோரியது இ.தொ.கா. எனவே இப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது,அதை போன்றே அடுத்த பேச்சிவார்த்தையிலும் சாதகமான முடிவு வரும் என எதிர்பார்க்கின்றோம்.

தற்போதைய நிலையில் அரசியல், தொழிற்சங்க பேதமின்றி பெருந்தோட்ட மக்கள் தமது வேதன உயர்விற்காக ஓர் அணியாக தமது ஒற்றுமையை வெளிபடுத்துகின்ற நிலையில் தொழிலாளர் தேசிய சங்கம் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கின்றதா என அதன் தலைவர் திகாம்பரம் தெளிவுபடுத்த வேண்டும். தலைமையின் அனுமதியை பெற்றா இளைஞன் அணி தலைவர் சிவநேசன் இவ்வாறான அரசியல் காழ்ப்புணரச்சியில் அறிக்கை வெளியிடுகின்றார். மலையக பெருந்தோட்ட மக்களையும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை காட்டிகொடுக்கும் வகையில் சிவநேசன் விடும் அறிக்கைக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என இ.தொ. கா இளைஞர் அணி தலைவர் ராஜமணி பிரசாந்த் தெவித்துள்ளார்.

Related Articles

Latest Articles