சீரற்ற காலநிலையால் 31 பேர் பலி: 14 பேர் மாயம்!

சீரற்ற காலநிலையால் 31 பேர் பலி: 14 பேர் மாயம்!

நாட்டில் நிலவும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் கடந்த 17 ஆம் திகதி முதல் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காணாமல்போயுள்ளனர்.

கடந்த 48 மணிநேரத்துக்குள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் 200 அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
மண்சரிவு , மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles