சுகாதார அமைச்சர் உட்பட 1,018 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஆயிரத்து 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 429  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 596 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுகாதார அமைச்சர், பூரணமாக குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

Related Articles

Latest Articles