சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதி – GMOA சந்திப்பு

வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று (11) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles