ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்பும் வகையில் அக்கட்சியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
புதிய நியமனங்கள் சில வழங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
சுதந்திரக்கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சிரேஸ்ட உப தலைவராக விஜயதாச ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன.
கட்சி தலைவருக்குள்ள அதிகாரங்களை அமுல்படுத்தும்போது அதற்கு அரசியல் உயர்பீடத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஜனநாயகக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
