சுவர் இடிந்து விழுந்து சிறுமி மரணம்; விளையாடியபோது பரிதாபச் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை பொத்தனை பகுதியில் வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இப்பரிதாபச் சம்பவம் நேற்று (03) புதன்கிழமை இடம்பெற்றதாக,

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான புணானை பொத்தனையைச்சேர்ந்த, உசனார் பாத்திமா றீமா என்ற மூன்றரை வயது சிறுமியே, வீட்டின் சுவர் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சிறுமியின் வீட்டிற்கு அருகில் வீடு உடைக்கப்பட்டு ஒரு பக்கம் சுவர் மாத்திரம் காணப்பட்டது. இந்நிலையில் சீமெந்துச் சுவர் ஓரத்திலிருந்து மூன்று சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென காற்று பலமாக வீசியதில், சுவர் தீடீரென சரிந்து விழுந்தது. இதன்போதே சிறுமி உயிழந்தார். மற்றைய இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

உயிரிழந்த மூன்றரை வயது சிறுமியின் ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles