சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது!

பணம் வைத்து சூதாடிய நான்கு பெண்கள் ,அம்பலங்கொட, குலிகொட என்ற இடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன்மாரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு இந்த நான்கு பெண்களும் பணம் வைத்து சூதாடுவதற்கு சென்றிருந்தபோது தம்மிடம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணம் வைத்து சூதாடும் பெண்கள் அதிகமாக அம்பலங்கொட பிரதேசத்தில் காணப்படுவதாக தெரிய வந்ததையடுத்து பொலிஸார்ர் இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles