ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க, தனது தேர்தல் பிரசாரத்தில் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
பதுளை தோட்டப்புறங்களில் அசைக்க முடியாது செல்வாக்கு செந்தில் தொண்டமானுக்கு இருப்பதால், அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் பெரும்பான்மையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாகாண சபையில் முதலமைச்சரை தீர்மானிக்கும் சக்தியாக செந்தில் தொண்டமான் இருந்தார். இதற்கு முன்னரும், நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னணி அரசியல்வாதிகளும் செந்தில் தொண்டமானின் படத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் வாக்குளைப் பெற முடியாது என்பதை அறிந்துள்ளதால் அவர்களது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டுள்ளதைக் காண முடிகிறது..
பலம்மிக்க அமைச்சுப் பதவியொன்று செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் தொண்டமானுக்கு இருந்த பெருமளவிலான ஆதரவு தற்போது இரட்டிப்பாகியுள்ளது. இதனால், செந்தில் தொண்டமானுக்கு முன்னர் இருந்த ஆதரவைவிட தற்போது ஆதரவளிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.