நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை – என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதன்போது செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், சுகாதார தரப்பினரின் பரிந்துரைகளின் பிரகாரமே முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.