செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
மும்பை ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.