“வீடுகளைக் கொளுத்தி அறகலயமூலம் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“எம்மிடம் ஆயுத படை இல்லை. வீடுகளை கொளுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்று , அறகலய மூலம் ஆட்சியை பிடிக்க மாட்டோம். ஜனநாயக வழியில் எமது பயணம் தொடரும்.
ஆளுங்கட்சியிலுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களால் பலனில்லை என ஜனாதிபதி கருதினால் இரண்டரை வருடங்களுக்கு பிறகு , நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல முடியும்.
எம்மிடம் வேலைத்திட்டம் உள்ளது, தூரநோக்கு சிந்தனை உள்ளது. கடந்த காலங்களில் செயல்பட்ட அனுபவம் உள்ளது. எனவே, ஜனநாயக வழியில் எந்நேரத்திலும் ஆட்சியை பொறுப்பேற்க தயார்.
எந்த கட்சியாக இருந்தாலும் இளைஞர்களை பொறுப்புடன் வழிநடத்த வேண்டும். புதிய இலங்கையை கட்யெழுப்பும் வகையில் நாம் இளைஞர்களை வழிநடத்துவோம்.” – என்றார்.
