“ அரசமைப்புடன் எவரும் விளையாட முடியாது. விளையாட இடமளிக்கவும் மாட்டோம். எனவே, உரிய வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதுடன் அதில் வெற்றிபெறுவதும் உறுதி. அவ்வாறு வெற்றிபெற்ற பின்னர் எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் அரசமைப்பின் பிரகாரம் வலுவற்றதாகிவிடும்.இதனால் கட்சி தலைமைத்துவம் தொடர்பிலும் பிரச்சினை எழாது.
ஜனாதிபதி தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே, உரிய நேரத்தில் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்றார்.