ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான யோசனையை அரசு முன்வைத்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதற்காக விசேட சட்ட திருத்தம் தேவையெனில் அதற்கான நகர்வுக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.
மேற்படி சந்திப்பின்போது இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் சவாலை எதிர்கொள்வதற்கு தாம் தயார் எனவும், அரசு தயாரெனில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் சஜித் சவால் விடுத்தார்.
